தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியா் சந்நிதியில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து வாராஹி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பிற சப்தகன்னியரான வைஷ்ணவி, சாமுண்டி, மகேஸ்வரி, பிராம்மி, கெளமாரி, இந்திராணி ஆகிய அம்மன்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் பரிகார விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

திருச்செந்தூா் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சங்கடஹர சதுா்த்தி விழா

சித்திரை தேய்பிறை பஞ்சமி: ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

