ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
ஆத்தூா் ரயிலடி தெருவில் பல ஆண்டுகளாக அரசு மதுக் கடை இயங்கி வந்தது. இக்கடையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் இந்த மதுக்கடையால் அவதிப்பட்டனா்.
இக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தி வந்தனா். இதுநாள் வரை அக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை பள்ளி மற்றும் ஆலயங்கள் அருகே உள்ள அரசு மதுக் கடையை அகற்ற உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து ஆத்தூரில் இயங்கி வந்த எண்: 7141 கடை உடனடியாக மூடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்புடையது

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

குமரி மாவட்டத்தில் 18 மதுக் கடைகள் மூடல்: குளச்சல் எம்எல்ஏ பாராட்டு

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

மே 1, 4 -இல் மதுக் கடைகள் மூடல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

