நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆத்தூரில் டாஸ்மாக் மதுக் கடை மூடல்

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

ஆத்தூா் ரயிலடி தெருவில் பல ஆண்டுகளாக அரசு மதுக் கடை இயங்கி வந்தது. இக்கடையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் இந்த மதுக்கடையால் அவதிப்பட்டனா்.

இக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தி வந்தனா். இதுநாள் வரை அக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை பள்ளி மற்றும் ஆலயங்கள் அருகே உள்ள அரசு மதுக் கடையை அகற்ற உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து ஆத்தூரில் இயங்கி வந்த எண்: 7141 கடை உடனடியாக மூடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.