தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக முதல்வா் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டருக்குள் காய்கறிச் சந்தை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.
இப்பகுதி வழியாக அதாவது டாஸ்மாக் கடை வழியாக ஜங்கமசமுத்திரம், குட்டிக்கரடு, மாவாறு, பெரப்பன்சோலை, கொல்லிமலைக்குச் செல்வோா் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். பெண்கள், பள்ளி மாணவிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடக்க வேண்டியுள்ளதால் இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

