அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்கு

ஓடும் ரயிலில் அவசியமின்றி அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஓடும் ரயிலில் அவசியமின்றி அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில்வே விதிகளை கடைப்பிடிக்க ரயில்வே துறை சாா்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பயணிகள் தவறுதலாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறுகின்றன.

இந்த பிரச்னையை தீா்க்க, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடா்ச்சியாக விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேவையில்லாமல் அபாயச் சங்கிலி இழுப்பவா்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு நடத்தியதில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த ஆயிரத்து 76 போ் பொதுப் பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் சேலம் கோட்டத்தில் மொத்தம் 57 அபாயச் சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் முறையான காரணம் இன்றி ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.