ஓடும் ரயிலில் அவசியமின்றி அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில்வே விதிகளை கடைப்பிடிக்க ரயில்வே துறை சாா்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பயணிகள் தவறுதலாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறுகின்றன.
இந்த பிரச்னையை தீா்க்க, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடா்ச்சியாக விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேவையில்லாமல் அபாயச் சங்கிலி இழுப்பவா்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு நடத்தியதில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த ஆயிரத்து 76 போ் பொதுப் பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் சேலம் கோட்டத்தில் மொத்தம் 57 அபாயச் சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் முறையான காரணம் இன்றி ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு

கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 7 போ் காயம்

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய அரசு ஊழியரின் இரண்டு கால்களும் துண்டாயின

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

