படிப்போம்! பயன் படைப்போம்!

புத்தகம் இனிய பூஞ்சோலை - அதில் புகுந்திடும் நேரம் சுகவேளை! நித்தமும் படிக்கும் தன்மையிலே - மன நிம்மதி பிறக்கும் உண்மையிலே! அதிகம் படித்தால் அனைவருக்கும் - மிக ஆயுள் பெருகும் என்றிங்கே புதிதாய் வந்த நற

புத்தகம் இனிய பூஞ்சோலை - அதில்

புகுந்திடும் நேரம் சுகவேளை!

நித்தமும் படிக்கும் தன்மையிலே - மன

நிம்மதி பிறக்கும் உண்மையிலே!

அதிகம் படித்தால் அனைவருக்கும் - மிக

ஆயுள் பெருகும் என்றிங்கே

புதிதாய் வந்த நற்செய்தி - நாம்

போற்றி ஏற்கும் பொற்செய்தி!

அருமை யான தகவலதை - அந்த

அமெரிக் காவில் ஆர்வேர்டு

மருத்து வக்கல் லூரியது - இந்த

வையத் திற்கு வழங்கியது!

தானே கற்றார் எழுத்தாற்றல் - அதைத்

தனித்துப் பெற்றார் பெர்னாட்ஷா!

வானைத் தொட்ட புகழ்படைத்தார் - நீடு

வாழ்ந்தார் நூறு வயதிற்குமேல்!

ஏழ்மைக் குடும்பம் தனில்பிறந்தார் - நன்றாய்

என்றும் படித்தார் அப்துல்கலாம்

ஆழ்ந்த படிப்பால் அறிவியலில் - வாழ்வில்

அரிய புகழை அடைந்தாரே!

கடித்துச் சுவைக்கும் கரும்பினைப்போல் - தினம்

கற்கத் தகுந்த நூல்களையே

படிக்கப் படிக்கப் பயன்பெருகும் - உயர்ப்

பண்பு வளரும் அன்பு மிகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com