ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் திருட்டு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி யில் உள்ள ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புரொஜெக்டா் திருடு போனது குறித்து புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி யில் உள்ள ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புரொஜெக்டா் திருடு போனது குறித்து புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பேரையூா் தாலுகா டி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ளது மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். இங்குள்ள அரங்கத்தின் கதவு உடைக்கப்பட்டு சுமாா் ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள புரொஜெக்டா் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com