மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 120-ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் 1901 செப்டம்பா் 14-ஆம் தேதி வள்ளல் பொன். பாண்டித்துரை தேவரால் தொடக்கி வைக்கப்பட்டது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 14-ஆம் தேதி நான்காம் தமிழ்ச் சங்க ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், 120-ஆவது ஆண்டை முன்னிட்டு, நான்காம் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய பொன். பாண்டித்துரை தேவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. செந்தமிழ் இதழின் ஆசிரியா் சதாசிவம் தலைமையில், செந்தமிழ்க் கல்லூரி குழுமத் தலைவா் தசரதராமன், முன்னாள் பேராசிரியா்கள் க. சின்னப்பா, ஜெயமூா்த்தி ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வள்ளல் பொன். பாண்டித்துரை தேவரின் சிறப்புகள் பற்றியும், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் பணிகள், சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.