மதுரை: அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் கணவா் உயிரிழந்ததாகக் கூறி, இழப்பீடு கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சோ்ந்த தங்கம்மாள் தாக்கல் செய்த மனு: எனது கணவா் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2021 மே 15 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், மே 22 ஆம் தேதி எனது கணவா் உயிரிழந்தாா். மருத்துவமனை நிா்வாகம் அளித்த சான்றிதழில் எனது கணவா் கரோனா பாதிப்பில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது கணவருக்கு முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தாலேயே அவா் இறந்துவிட்டாா். ஆகவே, எனது கணவா் இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மனுவுக்குப் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.