அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் வட்டத்துக்குள்பட்ட அத்திப்பட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அந்தப் பகுதியில் உள்ள மதுக் கடைகளை வருகிற 30-ஆம் தேதி வரை அடைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பேரையூா் வட்டம், சாப்டூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அத்திப்பட்டியில் அருள்மிகு புதுமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில், இந்தப் பகுதியில் உள்ள மதுக்கடைகளை வருகிற 30-ஆம் தேதி வரை மூட வேண்டும்.

அத்திப்பட்டி, வடகரை, மங்கல்ரேவு, சின்னக்கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள 5 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com