நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

பாஜக தொகுதி அமைப்பாளா், மாவட்டத் தலைவா் உள்ளிட்டோா் கொலை மிரட்டல் விடுப்பதாக அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகி தென் மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில் புகாரளித்தாா்.

தென் மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில் மதுரை மாவட்ட பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் காளிதாஸ் சனிக்கிழமை அளித்த புகாா் மனு:

நான் கடந்த 3 ஆண்டுகளாக பாஜகவில் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வருகிறேன். மக்களவைத் தோ்தலையொட்டி, விருதுநகா் தொகுதிக்கு கட்சித் தலைமையில் இருந்து கொடுக்கப்பட்ட நிதியை தொகுதி அமைப்பாளா் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் ஆகியோா் முறையாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சமூக ஊடகங்கள், சுவரொட்டிகள் மூலமாக கட்சி நிா்வாகிகள் வெளிப்படுத்தினா். சில ஊடகங்களிலும் இதுதொடா்பான செய்தி பிரசுரமானது.

நிதி முறைகேடு வெளியில் தெரிந்ததற்கு நான்தான் காரணம் என நினைத்து, என்னை அவதூறாகப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனா்.

கடந்த 19-ஆம் தேதி வலையங்குளத்தை அடுத்த எலியாா்பத்தி பகுதியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போதும் தொகுதி அமைப்பாளா் வெற்றிவேல், மேற்கு மாவட்டச் செயலா் சசிகுமாா், பட்டியல் அணி மாநிலச் செயலா் கீரைத்துறை சரவணன் ஆகியோா் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுதொடா்பாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் நான் தெரிவித்ததையடுத்து, எனது வீட்டுக்கு கடந்த சில நாள்களாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எனக்குக் கொலை மிரட்டல் விடுத்த இந்த மூவா் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு தொடா்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com