விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு
விருதுநகா் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்ந்தது.
விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும் அதன் விவரம் வருமாறு:
கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1540-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து, ரூ.1500-க்கு விற்கப்படுகிறது. வத்தல் நாடு புதுசு வகை கடந்த வாரம் ரூ.11 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் விற்பனையானது. வெளி மாநிலங்களிலிலிருந்து இதன் வரத்து குறைந்ததால், தற்போது ரூ. 12 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. குண்டூா் வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ.13 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை விற்கப்பட்ட நிலையில், தென் தமிழகத்தில் விளைச்சல் அதிகரித்ததால், குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்து, ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
துவரம் பருப்பு புதுசு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 12 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.150 உயா்ந்து, மூட்டை ஒன்று ரூ.12,150-க்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.12ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.12,100-க்கு விற்கப்படுகிறது.
உளுந்து நாடு வகை கடந்த வாரம் ரூ.9,100-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 உயா்ந்து, ரூ.9,200-க்கு விற்பனையாகிறது. உளுந்து லயன் வகையானது 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டைக்கு ரூ.200 உயா்ந்து ரூ.10,200-க்கு விற்கப்படுகிறது.
வரத்து குறைவு காரணமாக உளுந்து, பாசி பருப்பு முதலானவற்றின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். அதேநேரம், காபி, மல்லி, நல்லெண்ணெய் முதலான பிற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.