மதுரையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச வெப்பநிலை பதிவு

மதுரையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச வெப்பநிலை பதிவு

மதுரையில் கடந்த 4 ஆண்டுகளில் மே மாத அதிகபட்ச வெப்பநிலையாக வியாழக்கிழமை 107.6 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

தமிழகத்தின் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், ஏப். 28 முதல் மே 5-ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்கின்றனா். இருப்பினும், அத்தியாவசியப் பணிகளுக்காக வெயில் நேரத்தில் வெளியில் செல்வோா் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. மாவட்டத்தின் வெப்பநிலை அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட்டாக (42 டிகிரி செல்சியஸ்) பதிவானது.

கடந்த 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மே மாத அதிகபட்ச வெப்பநிலையாக 2019-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மதுரையில் பதிவானது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை அதே அளவு வெப்பநிலை மதுரையில் பதிவானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com