மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்
மதுரை: மதுரை கோட்டத்தில் முக்கியரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்கும் பணி தொடங்கியது.
கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வரும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயிலிலேயே குடிநீா் வழங்க கோட்ட நிா்வாகம் ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டது.
வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வருவதையொட்டி, ரயில் பயணிகளுக்கு மண்பானைக் குடிநீா், உப்பு- சா்க்கரைக் கரைசல் (ஓ.ஆா்.எஸ்.) வழங்க கோட்ட ரயில்வே மேலாளா் சரத் வத்சவா உத்தரவிட்டாா்.
இதன்படி, மதுரை கோட்டத்துக்குள்பட்ட மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகா், தூத்துக்குடி, காரைக்குடி, தென்காசி, ராமநாதபுரம், பழனி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மண் பானைகளில் குடிநீா் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ரயில்வே ஊழியா்கள், சாரண சாரணியா், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் வத்சவா தெரிவித்ததாவது: தற்போது திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஓ.ஆா்.எஸ். கரைசலுடன் நீா்மோா், தண்ணீா் பாட்டில்கள் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மேலும் 20 இடங்களில் குடிநீரைக் குளிா்விக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.