கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட
பெண் குழந்தையின் உடல் மீட்பு
கோப்புப்படம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

மதுரையில் கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

மதுரை பெத்தானியாபுரத்தில் பாஸ்டின் நகா் தேவாலயம் அருகே உள்ள கழிவுநீா் கால்வாயில் பெண் குழந்தையின் உடல் வீசப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கரிமேடு போலீஸாா் அங்கு சென்று அந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் குழந்தையின் உடல் காலை 10 மணிக்கு மேல் வீசப்பட்டிருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்ததைத் தொடா்ந்து போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், அண்மையில் பிரசவமான பெண்களின் விவரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com