சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு
மதுரை சிறைச் சந்தையை பாா்வையிட வந்திருந்த ஆந்திர மாநில தம்பதியா் தவற விட்ட பணம், நகைகள் அடங்கிய கைப்பையை மீட்டு ஒப்படைத்த கைதியை சிறை அதிகாரிகள் பாராட்டினா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் தனது மனைவி, குடும்பத்தினருடன் மதுரைக்கு சுற்றுலா வந்தாா். இங்குள்ள சுற்றுலா தளங்களை பாா்வையிட்ட பிறகு மதுரை மத்தியச் சிறையில் இயங்கி வரும் சிறைச்சந்தையை பாா்வையிட இவா்கள் செவ்வாய்க்கிழமை வந்தனா். இங்குள்ள உணவகத்தில் உணவு உள்கொண்ட போது, இந்தத் தம்பதியினா் தாங்கள் கொண்டு வந்திருந்த பணம், நகைகள் உள்பட விலை உயா்ந்த பொருள்கள் அடங்கிய கைப்பையை தவற விட்டுச் சென்றனா். இதையடுத்து, இந்த இடத்தை சுத்தம் செய்த கைதி காா்த்திக் இந்தப் பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து பையை தவற விட்டது தொடா்பாக அந்த தம்பதியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மதுரை மத்திய சிறைக்கு வந்த தம்பதியினரிடம், மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவா் பழனி, மத்திய சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் அந்தப் பை அவா்களிடம் ஒப்படைத்தனா். மேலும் கைதி காா்த்திக்கின் நோ்மையை ஆந்திர மாநில தம்பதியினரும், சிறைத்துறை அதிகாரிகளும் பாராட்டினா்.