பாஜவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கக் கூடாது என, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி விஜயகாந்தை வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு எஸ்டிபிஐ கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். இந்த விவகாரத்தில், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. திமுக ஆட்சியில் அறிவித்த திட்டம் என்பதற்காகவே, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், தேர்தல் கூட்டணி குறித்து 2 நாள்களில் முடிவு செய்வோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.