100 நாள் வேலைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1299 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பயனாளிகளுக்கான வேலை நாள்கள் 150 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளன. 100 நாள்களை நிறைவு செய்த பயனாளிகளுக்கு கூடுதலாக 50 நாள் வேலை வழங்கப்படும். அந்த நாள்களில் உறிஞ்சு குழிகள் அமைத்தல், கல்வரப்பு தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள், குளத்தின் வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல் போன்ற நீராதாரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 200 நபர்களுக்குக் குறையாமல் பணிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் ஏதேனும் தகவல்கள் மற்றும் புகார்கள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1299 நிறுவப்பட்டுள்ளது. அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் புகார்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.