திண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
Updated on
1 min read

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
      இதையொட்டி, கடந்த ஜூலை 29 ஆம் தேதி நவநாள்கள் திருப்பலி தொடங்கியது. அதில், முக்கிய திருப்பலியாக குணமளிக்கும் வழிபாடு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், செபஸ்தியார் ஆலயக் கொடிமரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில், புனித செபஸ்தியாரின் உருவம் பொறித்த திருக்கொடி ஏற்றப்பட்டது.
     திங்கள்கிழமை இரவு புனிதர்களின் மின் தேர் பவனி, வாண வேடிக்கையுடன் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி. தாமஸ் பால்சாமி தலைமையில், மறைமாவட்ட குருக்கள் மூலம் ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை (ஆக.7) நடைபெறுகிறது. 
   அதன் தொடர்ச்சியாக, புனிதருக்கு காணிக்கையாக ஆடு, கோழி, அரிசி உள்ளிட்ட இதர பொருள்களை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை அன்னதானம் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com