ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய இளம் தொழிலதிபர்களுக்கான சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை பள்ளித் தாளாளர் ஆர்.வி.கே. ரத்தினம் மற்றும் செயலர் சபரி ஹிதர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். முகாமில் இயற்கை உணவு வகைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடைகளை மாணவ, மாணவிகள் அமைத்து இருந்தனர். அதே போல திகில் விளையாட்டு அரங்கம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்களும், பெற்றோர்களும் பார்வையிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி முதன்மை அலுவலர் தினேஷ், பள்ளி முதன்மை முதல்வர் கணேசமூர்த்தி, பள்ளி முதல்வர் பவித் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





