செம்பட்டி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள பாளையங்கோட்டை பிரவாண்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் மகன் ராஜாமணி (22). ஆத்தூரைச் சேர்ந்த பிச்சைமணி மகன் சிவசர்மா (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கண்மாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டடு பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த ராஜாமணி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். சிவசர்மா தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்திட வேண்டும்: தங்கம் தென்னரசு

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


