கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

செம்பட்டி அருகே கார்-பைக் மோதல்: இளைஞர் சாவு

செம்பட்டி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர்  உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயம் அடைந்தார்.

Updated On :24 ஜூலை 2018, 1:02 am IST

செம்பட்டி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர்  உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயம் அடைந்தார்.
                 திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள பாளையங்கோட்டை பிரவாண்பட்டியைச் சேர்ந்த ஜெயபால்  மகன் ராஜாமணி (22). ஆத்தூரைச் சேர்ந்த பிச்சைமணி மகன் சிவசர்மா (20). இவர்கள்  இருவரும் நண்பர்கள்.   இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கண்மாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 
 இதில் இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டடு பலத்த  காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த ராஜாமணி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். சிவசர்மா தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகிறார்.  
   இது குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.