தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திண்டுக்கல்லில் வீடு புகுந்து 2 பெண்கள் குத்திக் கொலை

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வீடு புகுந்து 2 பெண்களை குத்திக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :14 மே 2018, 12:07 am

DIN

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வீடு புகுந்து 2 பெண்களை குத்திக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூர் யூசுப்பியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (50). இவரது மனைவி கொல்சம் பீவி(45). இவர்களது மகன் ஷேக் பரீத் என்பவரின் மனைவி மதினா பேகம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சாகுல்ஹமீது குடும்பத்தினர் சரியான முறையில் கவனிக்காததே மதினா பேகத்தின் இறப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், யூசுப்பியா நகரில் உள்ள வீட்டுக்குள் புகுந்து சாகுல்ஹமீது, கொல்சம் பீவி, இவரது தங்கை பர்கத்நிஷா(40) ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சைப் பலனின்றி பர்கத்நிஷா உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கொல்சம் பீவி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சாகுல்ஹமீதுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடுபுகுந்து கத்தியால் குத்தியவர்கள், மதினா பேகத்தின் சகோதரர்களாக இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துதப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.