/

கொடைக்கானல் ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 7:02 pm

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
மீன் வளத்துறை சார்பில் கொடைக்கானல் ஏரியில் நடைபெற்ற இப்போட்டி 18-வயதுக்குட்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியை மீன் வளத்துறை உதவி இயக்குநர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில் சிறியவர்கள் பிரிவில் கொடைக்கானலைச் சேர்ந்த சதீஷ்குமார் 225-கிராம் கென்டை மீனைப் பிடித்து முதல் பரிசும், மணிகண்டபிரபு 175-கிராம் சாதா கென்டை மீனை பிடித்து இரண்டாம் பரிசும், கரீம் என்பவர் சாதா கென்டை மீனை பிடித்து மூன்றாவது பரிசும் பெற்றனர்.
பெரியவர்கள் பிரிவில் அருமைநாயகம் என்பவர் 30-நிமிடத்தில் சுமார் 1.200 கிலோ எûயுள்ள கென்டை மீனை பிடித்து முதலிடம் பெற்றார். செல்வம் என்பவர் சுமார் ஒரு கிலோ எடையுள்ள சாதா கென்டை மீனை பிடித்து இரண்டாம் இடம் பிடித்தார்.
சௌந்தர் என்பவர் சுமார் 750 கிராம் எடையுள்ள சாதா கென்டை மீனை பிடித்து 3-ஆவது இடம் பிடித்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு மீன் வளத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மீன் வள ஆய்வாளர் கவிதா, மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் மனோகரன், கார்த்திக், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.