திண்டுக்கல் அருகே ரூ.50ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் பழனி புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, பழனியைச் சேர்ந்த கோபால்(62) என்பவர், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை மாலை பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு இரு கக்கர வாகனத்தில் வந்த கோபாலை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது 4 மூட்டைகளில் கோபால் கொண்டு வந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.50ஆயிரம் .
இதையடுத்து கோபால் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
