திண்டுக்கல்லில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 123 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் லாலா லஜபதிராய் 155ஆவது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் மாநகரத் தலைவர் க.ஆனந்தன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலர் மு.சுந்தர் ஈசன் சிறப்புரை நிகழ்த்தினார். நேதாஜி, காமராஜ் ஆகியோர்களின் உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்தமான் மற்றும் நிக்கோபர் பகுதியிலுள்ள ரோஸ் தீவை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் விரைவில் தொடங்கப்பட உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகத்திற்கு நேதாஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவை நிறுவனர் சு.வைரவேல் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


