கொடைக்கானலில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் அண்ணா சாலை, பாம்பார்புரம், முனியாண்டி கோயில் சாலை,பிரகாசபுரம் சாலை, டிப்போ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், இச்சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வரத் தொடங்கியுள்ளன. எனவே, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.