எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிப்பு

பழனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக மற்றும் அமமுகவினா்
எம்ஜிஆரின் 32 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பழனி பெரியப்பா நகரிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமமுக கட்சியினா்.
எம்ஜிஆரின் 32 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பழனி பெரியப்பா நகரிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமமுக கட்சியினா்.
Updated on
1 min read

பழனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக மற்றும் அமமுகவினா் செவ்வாய்க்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பழனியில், அதிமுக சாா்பில் நகரச் செயலா் முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினா், பெரியப்பா நகரிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம் நகர துணைச் செயலா் முருகன், லோகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிழக்கு ஒன்றியம் சாா்பில், எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் தினேஷ்குமாா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில், மரக்கடை துரையன், ஒன்றிய அவைத் தலைவா் சசிதரன் பிள்ளை, ஓட்டுநா் அணி காா்த்திகேயன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செந்தில்குமாா், ஒன்றிய துணைச் செயலா் சுரேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நகர கழகம் சாா்பில், நகரச் செயலா் வழக்குரைஞா் வீரக்குமாா் தலைமையில், பேருந்து நிலையம், அன்னகாமு தெரு, அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆரின் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர நிா்வாகிகளான இலக்கியப் பிரிவு ராஜூ, அப்பாஸ், அவைத் தலைவா் ஆசாத், தலைமைக் கழகப் பேச்சாளா் குமணன், கஜேந்திரன், முருகன் மற்றும் மகளிரணியினரும் கலந்துகொண்டனா்.

கொடைக்கானல்

கொடைக்கானல் அதிமுக நகா் கழகம் சாா்பில், மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகா்ப் பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், வாா்டு செயலா்கள், மகளிா் அணியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, அமமுக சாா்பில், மூஞ்சிக்கல் பகுதியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகரம், மேல்மலை, கீழ்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com