பாட்டியை கொன்ற பேரன் கைது

திண்டுக்கல்லில் மது அருந்த பணம் கொடுக்க மறுத்த பாட்டியை கல்லால் தாக்கி கொன்ற பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் மது அருந்த பணம் கொடுக்க மறுத்த பாட்டியை கல்லால் தாக்கி கொன்ற பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் குள்ளனம்பட்டி ஜீவா நகரைச் சோ்ந்தவா் ராமாயி (82).இவா் தனது மகன் தங்கராஜ் வீட்டில் வசித்து வந்தாா். தங்கராஜின் மனைவி மருதாயி, மகன் மணிகண்டன்(22). மது அருந்தும் பழக்கம் கொண்ட மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா்.

அவரது செலவுக்கு பாட்டி ராமாயி அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ராமாயியிடம் மணிகண்டன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளாா். ஆனால் பணம் கொடுக்க ராமாயி மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ராமாயியை கல்லால் தாக்கினாராம். அதை தடுக்க வந்த தந்தை தங்கராஜையும் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராமாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தங்கராஜ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com