• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

காவல் ஆய்வாளர் ரூ.50ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார்: ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

By DIN  |   Published on : 12th February 2019 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

தனது நிலம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வுகாண செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்த முதியவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (57). இவர், அப் பகுதியில், மிக்ஸர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தங்கவேல் தனது மகன், மகள், மருமகள் ஆகியோருடன், மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தார்.
ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த அவர் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில் தங்கவேல் கூறியதாவது: செம்பட்டி-பழனி சாலையில் 327 சதுரடி இடத்தை ஜேம்ஸ் ஜார்ஜ் என்பவரிடமிருந்து கடந்த 2003 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கினேன். எனது இடத்துக்கு அருகே ஜேம்ஸ் ஜார்ஜின் தம்பியான சேசுராஜ் என்ற சேஷய்யா என்பவருக்கும் இடம் உள்ளது. 
பின்னர், சேசுராஜ் தனது இடத்துடன் எனக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்டார். 
இது குறித்து செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளிக்க சென்றபோது, அனைத்து ஆவணங்களும் உனது பெயரில் உள்ளதால் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர், எனது இடத்தில் கடை கட்டினேன்.
இந்நிலையில், ரூ. 50 ஆயிரம் கொடுத்தால் உனக்கு சாதமாக முடித்துக் கொடுக்கிறேன்  என, காவல் ஆய்வாளர் தெரிவித்தார். என்னிடம் பணம் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லை எனத் தெரிவித்தேன். உடனே, அந்த இடம் உனக்கு சொந்தமில்லை. நீ வைத்திருப்பது போலியான பத்திரம்,  உடனடியாக இடத்தை காலி செய்துவிடு என மிரட்டினார். மேலும், எனது கடைக்கு வந்து பொருள்களை வெளியே தூக்கி எறிந்தார். என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டினார். இதனிடையே, சேசுராஜ்  மற்றும் ஆல்பர்ட் ஆகியோரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார். 
அவரை சமாதானப்படுத்திய போலீஸார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்