மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
By DIN | Published On : 07th January 2019 07:00 AM | Last Updated : 07th January 2019 07:00 AM | அ+அ அ- |

எரியோடு அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன் (55). விவசாயியான இவர், தனது தோட்டத்தில் மின் மோட்டாரை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், ஸ்ரீநிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.