கொடைக்கானலில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்றுகொண்டிருந்த 3 பேரை நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், ஒன்றேகால் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விஜி (19), பாலாஜி(21) மற்றும் காமாட்சி (20) எனத் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.