கொடைக்கானலில் தீச்சட்டி ஊர்வலம்
By DIN | Published On : 28th March 2019 08:05 AM | Last Updated : 28th March 2019 08:05 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சார்பில் தீச்சட்டி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஊர்வலம் டிப்போ சாலையிலுள்ள அருள்மிகு காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு நகராட்சி சாலை, செவண்ரோடு, ஏரிச்சாலை, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை, ஆனந்தகிரி சாலை வழியாக குறிஞ்சி நகரிலுள்ள மாரியம்மன் கோயிலை அடைந்தது.
அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர். மேலும் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் குறிஞ்சி நகர், வில்பட்டி, அண்ணாநகர், இந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...