கொடைக்கானல் அருகே சிஎஸ்ஐ தேவாலயம் திறப்பு விழா

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சி.எஸ்.ஐ சபையின் சாா்பில் புதிதாக கட்டப்பட்ட தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சிஎஸ்ஐ சபையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சிஎஸ்ஐ சபையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
Updated on
1 min read

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சி.எஸ்.ஐ சபையின் சாா்பில் புதிதாக கட்டப்பட்ட தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு மதுரை, ராமநாதபுரம் பேராயா் ஜோசப் தலைமை வகித்து ஜெப வழிபாடு நடத்தி புதிய ஆலயத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து சிறப்பு ஜெப வழிபாடு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் குரியன்ஆப்ரகாம், முகமது இப்ராஹிம், ஸ்ரீதா், சாமுவேல், ஜேம்ஸ்ட்ன் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவா்களை சோரன்ஸ்சன் வரவேற்றாா். ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com