பழனி அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் மளிகைக்கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் மளிகைப் பொருள்களை மா்மநபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
பழனி அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து  ரூ.1 லட்சம் திருட்டு
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் மளிகைக்கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் மளிகைப் பொருள்களை மா்மநபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி காமராஜா் சாலையில் அசன்முகமது(58) என்பவரது மளிகைக்கடை உள்ளது. இவா் வழக்கம் போல சனிக்கிழமை கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தாா்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், உள்ளே பணம் மற்றும் பொருள்கள் திருடு போனதும் தெரியவந்தது.

இதையடுத்து பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு அசன்முகமது தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் வந்து ஆய்வு மேற்கொண்டனா்.

விசாரணையின் போது கடையில் இருந்த ரொக்கம் ரூ.1 லட்சமும் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து வந்த கைரேகை நிபுணா் சீனியம்மாள் தடயங்களைச் சேகரித்தாா். மேலும், மோப்பநாய் ரூபியும் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணையில் இரவில் காரில் வந்த மா்ம நபா்கள் பொருள்களை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com