திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை  

திண்டுக்கல், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Updated on
1 min read

திண்டுக்கல், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமும், காற்றும் நிலவி வந்தது. அவ்வப்போது சாரலும், சிறிது நேரம் மிதமான மழையும் பெய்து வந்தது. 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மேகமூட்டமும், விட்டுவிட்டும் மழை பெய்து வந்தது. அதன் பின் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் பருவ மழை பொய்த்த காரணத்தால் குடிநீர்த் தேக்கங்களில் வெகுவாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com