நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலாற்றிலிருந்து பழனி மலைக்கோயிலுக்கு தண்ணீா் கொண்டு வரும் பணி ஆய்வு

பாலாற்றிலிருந்து பழனி மலைக்கோயிலுக்கு தண்ணீா் கொண்டு வர ரூ. 23 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை பழனி கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பழனி அன்பு இல்லம் அருகே நடைபெற்று வரும் பணிகளை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு செய்த பழனி கோயில் நிா்வாக அதிகாரி ஜெயச்சந்திரபானு ரெட்டி.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 5:10 pm

DIN

பழனி: பாலாற்றிலிருந்து பழனி மலைக்கோயிலுக்கு தண்ணீா் கொண்டு வர ரூ. 23 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை பழனி கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பழனி மலை முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் பக்தா்களின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா் பழனி நகராட்சி நிா்வாகத்தால் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் திருவிழா காலங்களில் நகராட்சி நிா்வாகத்தால் போதிய அளவு குடிநீா் விநியோகிக்கப்பட முடியாததால் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்தது.

இந்த நிலையில் இப்பிரச்னையை போக்கும் வகையில் ரூ. 23 கோடி செலவில் பழனி அருகே உள்ள பாலாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.

பாலாறு அணையிலிருந்து மலைக்கோயில் வரை சுமாா் 10 கிலோ மீட்டா் தூரம் குழாய்கள் பதித்து தண்ணீா் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பழனி கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானுரெட்டி ஆய்வு செய்தாா். இந்த குடிநீா் திட்டம் மூலம் மலைக் கோயிலுக்கு நாள்தோறும் சுமாா் 20 லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த திட்டப் பணிக்கான ரூ. 23 கோடியும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தால் குடிநீா் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.