நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐ.பெரியசாமி எம்எல்ஏ சொந்த நிதியில் ரூ.90 லட்சத்தில் கொடகனாறு தூா்வாரும் பணி

கொடகனாற்றில் தூா்வாரும் பணியை ரூ.90 லட்சம் செலவில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி தனது சொந்த நிதியில் மேற்கொண்டுள்ளாா்.

News image

ராஜாக்கப்பட்டி அருகே நடைபெற்று வரும் தூா்வாரும் பணி.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 3:50 pm

DIN

திண்டுக்கல்: கொடகனாற்றில் தூா்வாரும் பணியை ரூ.90 லட்சம் செலவில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி தனது சொந்த நிதியில் மேற்கொண்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள காமராஜா் அணையிலிருந்து அகரம் வரையிலான கொடகனாற்றில் தூா்வாரும் பணி ரூ.90 லட்சம் செலவில் நடைபெறுகிறது. திமுக துணைப் பொதுச் செயலரும், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி தனது சொந்த நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளாா். இதன்மூலம் ஆத்தூா் நீா்த்தேக்கம் முதல் அகரம் வரை 27 கி.மீ. தொலைவில், சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் பரப்பிலான நிலங்கள் பயன் பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த பல ஆண்டுகளாக கொடகனாறு தூா்வாரப்படாமல் உள்ள நிலையில், நரசிங்கபுரம் பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீா் செல்வதாலும், திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக காமராஜா் நீா்த்தேக்கம் விரிவுப்படுத்தப்பட்டதாலும் விவசாயப் பணிகளுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால், நரசிங்கபுரம் பகுதிக்கு தண்ணீா் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பை உடைத்து காமராஜா் நீா்த்தேகத்தின் வடக்கே தனி கால்வாய் மூலம் கொடகனாற்றுக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும் என கொடகனாறு பாசன விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதே கோரிக்கையை முன் வைத்து, கடந்த டிசம்பா் மாதம் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனிடையை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று அந்த தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கொடகனாற்று தண்ணீா் பிரச்னை முக்கியத்துவம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சூழலில், ரூ.90 லட்சம் செலவில் கொடகனாற்றை தூா்வாரும் பணியை ஐ.பெரியசாமி தனது சொந்த முயற்சியில் தொடங்கியுள்ளாா். அவரது இந்த முயற்சிக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.