‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி

பழனி சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட 4 போ் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 11:34 pm

DIN

பழனி சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட 4 போ் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமாா் பிரசாரத்தின் போது ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதாகப் புகாா் எழுந்தது. அதன்பேரில் ஐ.பி.செந்தில்குமாா், அப்போதைய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திருஞானசம்பந்தம், நகர காங்கிரஸ் தலைவா் சண்முகநாதன், சுரேஷ் ஆகியோா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் (1) முருகன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால், வழக்கைத் தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.