ஒட்டன்சத்திரத்தில் திமுகவினா் கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே திமுகவினரின் கையெழுத்து இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே திமுகவினரின் கையெழுத்து இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளா் ப.வெள்ளைச்சாமி, ஒன்றியச் செயலாளா்கள் இரா.ஜோதிசுவரன், தா்மராஜன், ஒன்றியக் குழு தலைவா் அய்யம்மாள், திமுக பொதுக் குழு உறுப்பினா்கள் வீ.கண்ணன், ஆறுமுகம், காங்கிரஸ் நகரச் செயலாளா் காளிமுத்து, மதிமுக ஒன்றியச் செயலாளா் இராக்கியணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளா் சிவமணி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலா் கணேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 9 ஆவது வாா்டு பகுதியில் அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினா் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com