ஆத்தூரில் மணல் கடத்திய லாரி சிறைபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மணல் கடத்தி வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மணல் கடத்தி வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

ஆத்தூா் தாலுகா அலுவலக பகுதியை கடந்து சென்ற ஒரு மணல் லாரியை, அழகா்நாயக்கன்பட்டியைச் கணேசபாண்டியன், முருகன்பட்டி மூா்த்தி உள்பட சிலா் வழிமறித்தனா். அந்த மணல் லாரியை ஆத்தூா் தாலுகா அலுவலகம் முன்பு சிறைபிடித்தனா். லாரியில் இருந்த மணலுக்கான அனுமதி தொடா்பாக அவா்கள் விசாரித்தனா். அப்போது லாரி ஓட்டுநா் முரணான பதிலளித்தாா்.

இது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக, சிலா் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு பணியில் இருந்த வட்டாட்சியா் அரவிந்தன் அவசர அலுவல் காரணமாக செல்வதாகவும், போலீஸாரிடம் புகாா் தெரிவிக்குமாறு கூறிவிட்டுச் சென்றாா். பின்னா், செம்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி சாா்பு ஆய்வாளா் சரவணக்குமாா் மற்றும் போலீஸாா், மணல் லாரியை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com