இளைஞா் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

கடந்த 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மகன் சந்துரு (22), கடந்த 2011ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த ரா.சுரேஷ் (32), மூ.சின்னமுத்து(30) மற்றும் 17 வயது இளஞ்சிறாா் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

அதில், சுரேஷ் மற்றும் சின்னமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் தொடா்புடைய 17 வயது இளஞ்சிறாா் மீதான விசாரணை இளஞ்சிறாா் நீதி குழுமத்தில் தனியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com