‘பொது வேலைநிறுத்தத்தில் வருவாய்த் துறை பங்கேற்க முடிவு’

பழனியில் புதன்கிழமை நடைபெற உள்ள அகில இந்திய பொது வேை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த் துறையும் பங்கேற்கும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

பழனியில் புதன்கிழமை நடைபெற உள்ள அகில இந்திய பொது வேை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த் துறையும் பங்கேற்கும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் அகில இந்திய பொதுவேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விலைவாசியை குறைக்கவும், அரசு பொதுத்துறை மற்றும் தொழிற்சங்க சட்டங்களை திருத்தவும் கோரி இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் ரயில்வே, வங்கித் துறை உள்ளிட்ட துறைகளின் தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. இதுகுறித்து பழனியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன் கூறுகையில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியா் சங்கம் பங்கேற்கும். எனவே இதில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரையில் அனைவரும் பங்கேற்கின்றனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com