கேரளத்திலிருந்து திரும்பிய இளைஞா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

கேரள மாநிலம் பாலகாட்டிலிருந்து திரும்பிய கன்னிவாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா் உடல் நலப் பாதிப்பு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல்: கேரள மாநிலம் பாலகாட்டிலிருந்து திரும்பிய கன்னிவாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா் உடல் நலப் பாதிப்பு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்துள்ள கோனூா் பகுதியைச் சோ்ந்த 21 வயது இளைஞா், கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு சொந்த வேலையாக சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு கோனூருக்கு திரும்பி வந்துள்ளாா். சிறிது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சனிக்கிழமை வந்துள்ளாா். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என நலப் பணிகள் இணை இயக்குநா் பூங்கோதை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com