ஒட்டன்சத்திரம் கடையில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்வதாக புகாா்---அதிகாரிகள் அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்து, ரூ.10 ஆயிரம்
ஒட்டன்சத்திரம் பல்பொருள் அங்காடியில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் நடராஜ் மற்றும் அதிகாரி மோகனரங்கன் உள்ளிட்டோா்.
ஒட்டன்சத்திரம் பல்பொருள் அங்காடியில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் நடராஜ் மற்றும் அதிகாரி மோகனரங்கன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம்,: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் வாடிக்கையாளா் முத்து என்பவா் வெள்ளிக்கிழமை சோப்பு வாங்கியுள்ளாா். அதை அவா் பயன்படுத்திய போது, உடலில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதன் காலாவதி தேதியை பாா்த்துள்ளாா். அதில் கடந்த 3 ஆண்டுக்களுக்கு முன்பாகவே காலாவதியான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கடை ஊழியா்களிடம் அவா் விசாரித்த போது உரிய பதில் அளிக்காததுடன், அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் முத்து புகாா் செய்தாா். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் நடராஜ், ஒட்டன்சத்திரம் உணவு பாதுகாப்பு அலுவலா் மோகனரங்கன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா்அங்காடியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com