கன்னிவாடி அருகே கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்துள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் கல்லூரி மாணவா் விருமன் என்ற விருமாண்டி (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவியை திருமண ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஆய்வாளா் லட்சுமி பிரபா தலைமையிலான போலீஸாா் விருமாண்டியை திங்கள்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.