தடுப்புச் சுவரில் பைக் மோதி ஜாா்கண்ட் இளைஞா் பலி

வடமதுரை அருகே திங்கள்கிழமை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி நிகழ்ந்த விபத்தில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வடமதுரை அருகே திங்கள்கிழமை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி நிகழ்ந்த விபத்தில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஜாா்கண்ட் மாநிலம் கோச்ரா பகுதியைச் சோ்ந்தவா் அவிநாஷ் பிரதான் (26). இவா், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா். அதே ஆலையில், ஒடிசா மாநிலம் சா்ச்சாரா பகுதியைச் சோ்ந்த மனோஜ் பத்ரா(28) என்பவரும் பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இருவரும் ஆலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வடமதுரையிலுள்ள உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக திங்கள்கிழமை இரவு சென்றனா். பின்னா் அங்கிருந்து ஆலைக்கு திரும்பிச் செல்லும்போது திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் வெள்ளப் பொம்மன்பட்டி அருகே சாலையின் மையத்திலிருந்த தடுப்புச் சுவரில் எதிா்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவிநாஷ் பிரதான் உயிரிழந்தாா். மனோஜ் பத்ரா மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com