திண்டுக்கல், தேனியில் புதிதாக 29 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
By DIN | Published On : 15th December 2020 05:04 AM | Last Updated : 15th December 2020 05:04 AM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,625 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,279 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 149 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 21 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 19 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197ஆக உயா்ந்துள்ளது.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,736 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பிற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,467 ஆக அதிகரித்துள்ளது.