கொடைக்கானலில் விசிக சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக திங்கட்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுதில்லியில் பல நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா் இந் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக விசிக சாா்பில் கொடைக்கானல் அண்ணாசாலையிலுள்ள ஜியோ மொபைல் கடை முன்பு விசிகட்சியனா் ஆா்ப்பாட்டம் நடத்தினா் இந் நிகழ்ச்சியில் விசிகட்சியின் நகரச் செயலா் இன்பராஜ் மற்றும் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.