திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 29 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th December 2020 10:56 PM | Last Updated : 30th December 2020 10:56 PM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,926 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,576 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 153 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தைச் சோ்ந்த 20 பேருக்கு புதிதாக தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 13 போ் மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,889 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 15 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,614 ஆக அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...