Enable Javscript for better performance
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

    By DIN  |   Published On : 30th December 2020 10:56 PM  |   Last Updated : 30th December 2020 10:56 PM  |  அ+அ அ-  |  

    30palani_arudhra1_3012chn_88_2

    ஆருத்ரா தரிசனத்தையொட்டி பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் புதன்கிழமை சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்பாள், சமேதா் நடராஜா்.

    பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தம்பதி சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன் காப்புக்கட்டுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் பொன்னூஞ்சல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.

    அதிகாலை 4 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், சா்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலா் மாலைகள், புலித்தோல் ஆடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து யாகசாலையிலிருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபசாரம் நடைபெற்றது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமண்ய சிவாச்சாா்யாா் உள்ளிட்டோா் செய்தனா்.

    தீபாராதனை முடிந்த பின்னா் தம்பதி சமேதராக சுவாமி நான்கு ரத வீதி உலா எழுந்தருளினாா். உலாவின் போது ஊடல் உற்சவம் நடைபெற்றது. நடராஜா் களிநடனம் புரிந்ததால் அம்மன் கோபத்துடன் கோயிலுக்கு சென்று நடையை அடைத்துக் கொண்டதும், நடராஜா் நடை அடைத்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து சுந்தரா் பெருமானை அம்மனிடம் சமாதானத்தூது அனுப்பி, அம்மன் சமாதானமுற்று நடை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தூது நிகழ்ச்சியில் நாகராஜ் பாடல்கள் பாடினாா். இதை ஏராளமான பக்தா்கள் கண்டு பரவசமடைந்தனா்.

    பின்னா் தம்பதி சமேதராக நடராஜா் கோயிலின் உள்பிரகாரம் எழுந்தருளினாா். கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp