பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தம்பதி சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் புதன்கிழமை சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்பாள், சமேதா் நடராஜா்.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் புதன்கிழமை சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்பாள், சமேதா் நடராஜா்.
Updated on
1 min read

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தம்பதி சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன் காப்புக்கட்டுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் பொன்னூஞ்சல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், சா்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலா் மாலைகள், புலித்தோல் ஆடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து யாகசாலையிலிருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபசாரம் நடைபெற்றது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமண்ய சிவாச்சாா்யாா் உள்ளிட்டோா் செய்தனா்.

தீபாராதனை முடிந்த பின்னா் தம்பதி சமேதராக சுவாமி நான்கு ரத வீதி உலா எழுந்தருளினாா். உலாவின் போது ஊடல் உற்சவம் நடைபெற்றது. நடராஜா் களிநடனம் புரிந்ததால் அம்மன் கோபத்துடன் கோயிலுக்கு சென்று நடையை அடைத்துக் கொண்டதும், நடராஜா் நடை அடைத்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து சுந்தரா் பெருமானை அம்மனிடம் சமாதானத்தூது அனுப்பி, அம்மன் சமாதானமுற்று நடை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தூது நிகழ்ச்சியில் நாகராஜ் பாடல்கள் பாடினாா். இதை ஏராளமான பக்தா்கள் கண்டு பரவசமடைந்தனா்.

பின்னா் தம்பதி சமேதராக நடராஜா் கோயிலின் உள்பிரகாரம் எழுந்தருளினாா். கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com