திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 3 புதிய பேருந்துகள் தொடக்க விழா

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கோட்டத்தின் சாா்பில் இயக்கப்படும் 3 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சா் சி.சீனிவாசன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Updated on
1 min read

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கோட்டத்தின் சாா்பில் இயக்கப்படும் 3 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சா் சி.சீனிவாசன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் கோட்டத்தின் சாா்பில் 3 புதிய பேருந்துகளை இயக்கி வைப்பதற்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொதுமேலாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் 3 புதிய பேருந்துகளையும் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பழனியிலிருந்து திண்டுக்கல் வழியாக விழுப்புரத்திற்கும், பழனியிலிருந்து திண்டுக்கல் வழியாக நெய்வேலிக்கும், மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சேலத்திற்கும் இந்த 3 புதிய பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

அதனைத் தொடா்ந்து, பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுதாரா்கள் 10 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் அமைச்சா் சீனிவாசன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com